Sunday 15 September 2024

இந்தியக் கவிதையியல்: பகுதி - 1: தோற்றுவாய், தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

தீ.ந.ஶ்ரீ கண்டய்யா

அறிமுகம்

முதுகலைத் தமிழ் பயிலும் மாணவர்களுக்கு இலக்கியக் கொள்கைகளையும், திறனாய்வையும் கற்பிக்கும் பாடநூல்களை அத்துறை அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இவர்கள், தங்கள் நூல்களில் ஐரோப்பிய இலக்கியக் கொள்கைகளை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் எளிமையாகவே விளக்கியிருக்கிறார்கள். இலக்கிய நுண்ணுணர்வு முற்காலத்தில் தமிழ்ச்சூழலில் எவ்வாறு விளங்கியது என்பதையும் இவர்களின் பாடநூல்கள் எடுத்துக்காட்ட தவறவில்லை. 

ஆடல் 7, செவ்வேள் ஆடல் -கம்பப்பாடல்கள் , தாமரைக்கண்ணன் புதுச்சேரி

குக்கே சுப்ரமண்யர்

சூரசம்கார கூத்து

அங்கப் படைவிட் டன்றைப் படுகைக்
கந்திக் கடலிற் ...... கடிதோடா
அந்தப் பொழிலிற் சந்துத் தலையுற்
றஞ்சப் பொருதுற் ...... றொழியாதே
செங்கைக் கதிருற் றொன்றக் கடலிற்
சென்றுற் றவர்தற் ...... பொருளானாய்
சிந்தைக் கனிவைத் தந்தப் பொழிலிற்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

தனது சேனையை விட்டு கடலை தாண்டி சூரன் நகரான மகேந்திரபுரத்தில் தூது சென்று, அசுரர்கள் அஞ்ச போர் புரிந்து சிவந்த கிரணங்களை உடைய சூரியனை ஒத்து கடலிலிருந்து திரும்பி வந்த வீரபாகுவின் ஆவியான முருகா, பொழில் சூழ்ந்த செந்தூரில் உறையும் குமரா

(கொங்கைப் பணையிற் என்று துவங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)

அச்சிலிருந்து திரைக்கு - தியடோர் பாஸ்கரன்

ஜெயகாந்தனின் திரை உலகம்

பிரித்துப்பார்க்க முடியாத அளவிற்கு அரசியலுடன் சினிமா பிணைந்திருக்கும் தமிழ்ச் சூழலில், இடதுசாரி தரப்பிலிருந்து சில தற்காலிக இடையீடுகள் நடந்துள்ளன. அவற்றுள் ஜெயகாந்தனின் முயற்சிகள் நாம் கவனிக்கவேண்டிய தகுதிவாய்ந்தவை. அதிக தாக்கத்தை உண்டாக்கிய அவரது விரிவான இலக்கியப் படைப்புகளின் வெளிச்சத்தால், தமிழ் சினிமாவுக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு பலசமயம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுவதில்லை. தமிழ் சினிமாவுக்கும் வெள்ளித் திரைக்குமான அர்த்தப்பூர்வ உரையாடலை தொடங்கி வைத்ததே அவர்தான். அவ்வப்போது நிகழும் சில தெறிப்புகளை தவிர அவ்வுரையாடல் தொடர்ந்து நிகழவில்லை என்பது வேறு விஷயம். அவருடைய பல கதைகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், தன் சொந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு, அவர் இயக்கிய இரு படங்களுமே தமிழ் சினிமாவின் வரலாற்றில் முக்கியமானவை. 1965 இல் அவர் உருவாக்கிய உன்னைப் போல் ஒருவன், பின்னர் அடுத்த வருடமே அவர் இயக்கிய யாருக்காக அழுதான் (1966) ஆகிய படங்கள், ஒரு எழுத்தாளர் தன் சொந்த இலக்கிய ஆக்கங்களை தானே படமாக்கிய அரிய நிகழ்வுகளுள் முக்கியமானவை.

பௌத்த வினாவல் - 4, ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

சங்கம்


254. பௌத்த பிக்குகள் பிற மதங்களின் மதகுருக்களிடமிருந்து எவ்வாறு வேறுபடுகின்றனர்?

பிற மதங்களின் குருக்கள் தங்களை மனிதருக்கும் கடவுளுக்கும் இடையேயான தூதர்கள் என்றும், நம்முடைய பாவங்களை மன்னிப்பவர்கள் என்றும் அறிவித்துகொள்கின்றனர். பெளத்த பிக்குகள் தங்களை தெய்வீக ஆற்றலுடையவர்கள் என அறிவித்துக்கொள்பவர்கள் இல்லை, அவ்வாறு எதையும் எதிர்பார்ப்பதுமில்லை.


255. இவ்வாறு பிற மத அமைப்புகள் செய்வதை பௌத்த பிக்குகள் செய்வதில்லை என்றால் ஏன் மக்கள் சமூகத்தில் இருந்து தனித்து இருக்கும் ‘சங்கம்’ உருவாக்கப்பட்டது?


சங்கத்தின் நோக்கம் உயர்ந்த அறமனப்பான்மை, தன்னலமின்மை, அறிவாற்றல், மற்றும் ஆன்மீக மனம் உடையவர்கள், புலனின்பம் மற்றும் வேறு தன்னல விருப்பங்களை வலுப்பெறச்செய்யும் அன்றாட சமூக சூழலிலிருந்து விலகி இருப்பதற்காகவும், உயர் ஞானத்தை அடைய அவர்கள் தங்கள் வாழ்வை அர்ப்பணிப்பதற்காகவும் நிறுவப்பட்டது. மேலும் இவர்கள் துயரத்தை தேடித்தரும் இன்பநாட்ட பாதையிலிருந்து மனிதர்களை விலகச்செய்து, பௌத்தத்தின் கடினமான பாதையை பின்பற்றி அவர்கள் மகிழவும், இறுதி முக்தியை அடைவதற்கு அவர்களுக்கு உதவவும் ஆசிரியர்களாக தங்களை தகுதிப்படுத்திக் கொள்வதற்காகவும் அமைக்கப்பட்டது.

Archaeological views on Thirukural - S. Vasanthi

Abstract: 

Thirukkural was written in Tamil around the end of the first century B.C.E., during this period outstanding didactic poetry primarily to Jainism were written. Tirukkural was not only a book that preaches moral and art of living leading a life of virtue in the society. Apart from these facts the condition of social and economic perspectives are prevalent in Thirukkural. The recent developments in the field of archaeology, epigraphy of Tamil country needs to be reviewed in the context of the great work Thirukkural. It is right time to analyse and review the old available data’s with the light of currently available material and interprets them with the present scenario with historic perspective.

அறிவியலும் அதன் மீதான விமர்சனங்களும் - பகுதி 2 - சமீர் ஒகாஸா

அறிவியல் மதிப்பீடு (Value) அற்றதா? 

சிலநேரங்களில் அறிவியல் அறிவு அறமற்ற செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது, ஏறக்குறைய அனைவரும் இதை ஒத்துக்கொள்வார்கள். அணு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைத் தயாரித்தல் இதற்கு உதாரணம். ஆனால் அறத்தின் அடிப்படையில் அறிவியல் அறிவு கண்டிக்கத்தக்கது என்பதை இது போன்ற செயல்பாடுகள் காட்டவில்லை. அந்த அறிவை எடுத்துக்கொண்ட பயன்பாடு தான் அறமற்றது. அறிவியல் அல்லது அறிவியல்-சார் அறிவு அறமுடையதா, அறமற்றதா என பேசுவது பொருளற்றது என பல தத்துவவாதிகள் சொல்கிறார்கள். அறிவியல் என்பது மாறாவுண்மைகளுடன் (fact) சம்மந்தப்பட்டது. அறிவியலுக்குள் இருக்கும் மாறாவுண்மைகளுக்கு அறம்சார் முக்கியத்துவமும் எதுவும் கிடையாது. அந்த மாறாவுண்மைகளை கொண்டு நாம் செய்வது சரியா, தவறா, நியாயமானதா, நியாயமற்றதா என பார்ப்பதே முக்கியம். இந்த பார்வையின் படி, அறிவியல் அதன் அடிப்படையிலேயே மதிப்பீடுகளற்ற ஒரு செயல்பாடு. அதன் வேலை உலகைப் பற்றிய தகவல்களை தருவது மட்டுமே. அந்த தகவல்களைக் கொண்டு சமூகம் என்ன செய்கிறது என்பது வேறுவிஷயம்.