![]() |
| குடவாயில் பாலசுப்ரமணியன் |
குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாற்று ஆய்வாளர். தமிழின் பண்பாட்டு முகங்களில் ஒருவர். சோழர் வரலாறு, சோழர்கள் எடுத்த பெருங்கோவில்கள், தஞ்சாவூர் அரச வம்சங்கள், சைவ சமயம், கோவில்களின் பண்பாட்டு இவை குறித்தான பாலசுப்ரமணியனின் நூல்கள் திரளான வாசகர்களை வரலாறு நோக்கி ஈர்த்துள்ளது. கோவில்களை மையப்படுத்தி, அவற்றின் பண்பாட்டு கூறுகளின் வழியே வரலாற்றை தொகுத்தளிப்பது குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுப்பாணி. ஒரு கவிதையின் நுட்பத்தை தேர்ந்த வாசகன் சுவைப்பது போல, கலை சார்ந்த அழகியலை வரலாற்றின் வழியே விதந்தோதிக்கொண்டே இருக்கிறார் பாலசுப்ரமணியன். அவரது எழுத்துக்களை வாசிப்பவர்களும் அந்த வியப்பை சென்றடைகிறார்கள்.






















