Tuesday, 17 February 2026

கோவில்கள் தான் நமது பண்பாட்டின் நுழைவாயில் - குடவாயில் பாலசுப்ரமணியன் நேர்காணல்

குடவாயில் பாலசுப்ரமணியன்

குடவாயில் பாலசுப்ரமணியன் வரலாற்று ஆய்வாளர். தமிழின் பண்பாட்டு முகங்களில் ஒருவர். சோழர் வரலாறு, சோழர்கள் எடுத்த பெருங்கோவில்கள், தஞ்சாவூர் அரச வம்சங்கள், சைவ சமயம், கோவில்களின் பண்பாட்டு இவை குறித்தான பாலசுப்ரமணியனின் நூல்கள் திரளான வாசகர்களை வரலாறு நோக்கி ஈர்த்துள்ளது. கோவில்களை மையப்படுத்தி, அவற்றின் பண்பாட்டு கூறுகளின் வழியே வரலாற்றை தொகுத்தளிப்பது குடவாயில் பாலசுப்ரமணியனின் ஆய்வுப்பாணி. ஒரு கவிதையின் நுட்பத்தை தேர்ந்த வாசகன் சுவைப்பது போல, கலை சார்ந்த அழகியலை வரலாற்றின் வழியே விதந்தோதிக்கொண்டே இருக்கிறார் பாலசுப்ரமணியன். அவரது எழுத்துக்களை வாசிப்பவர்களும் அந்த வியப்பை சென்றடைகிறார்கள்.

குடவாயில் பாலசுப்ரமணியன் எனும் மாபெரும் கலைஞன் - சுரேஷ் பிரதீப்

குடவாயில் பாலசுப்ரமணியன்

(நாம் நமது வரலாற்றுப் பார்வைகளை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. வாளேந்தி வித்தை காட்டியவர்கள் அல்ல மக்களுக்கு நலம் செய்தவர்களே நாயகர்கள், நாயகிகள் என்று நம்ப நம்மை பழக்கவேண்டியிருக்கிறது. - ஜெயமோகன்)

வின்சென்ட் ஸ்மித் போன்ற வரலாற்று ஆசிரியர்களால் இந்தியாவைப் பற்றிய முதற்கட்ட வரலாற்று வரைவு உருவாக்கப்பட்டது. வரலாற்றை வாசிக்கப் புகும் எந்தவொரு வாசகருக்கும் இந்த வரைவு உற்சாகம் தரக்கூடியது. ஏனெனில் நாம் நேரடியாக சான்றுகள் அடிப்படையில் 'உருவாக்கப்படும்' வரலாறுகளை வாசிப்பதில்லை. சான்றுகள் அடிப்படையில் எழுதப்படும் வரலாறு எப்போதும் தன்னை பொய்ப்பித்துக் கொள்ளும் நிலையிலேயே உள்ளது‌. புதிதாக ஒரு சான்று கிடைக்கும்போது அதுவரை சொல்லப்பட்ட வரலாற்றில் அச்சான்றினை பொருத்த வேண்டி இருக்கிறது. ஆகவே ஒரு நல்ல வரலாற்று நூல் எப்போதும் தன்னை எல்லாப் பக்கங்களிலும் திறந்தே வைத்திருக்கிறது. முற்று முடிவாக எதையும் சொல்லிவிடுவதில்லை. ஆனால் அத்தகைய வரலாறுகளை வாசிப்பதில் வாசகர்களுக்கு ஆர்வம் இருப்பதில்லை.‌ ஏனெனில் சந்தேகத்துடனும் 'மாற்றத்துக்கு உட்பட்டது' என்ற உபதலைப்புடனும் சொல்லப்படும் வரலாற்றில் இருந்து கதைகளை உருவாக்க முடிவதில்லை.

நுண்ணியதன் பிரம்மாண்டம் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

குடவாயில் பாலசுப்ரமணியன்

1

"வரலாற்று எழுத்து ஒவ்வொரு ஐம்பது அண்டுகளில் மாறி வந்திருப்பதை நாம் தமிழ் வரலாற்று நூல்கள் கொண்டு அறியலாம். அந்த வகையில் இன்றைய வரலாற்றெழுத்தென்பது நுண்வரலாறு சார்ந்ததாகவே இருக்க முடியும்" என எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். வரலாறாய்வுலகில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இது.

நம் ஆரம்ப கால வரலாற்று ஆசிரியர்கள் (கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, சி. மீனாட்சி, கே.கே. பிள்ளை போன்றவர்கள்) எழுதியது ஒட்டுமொத்த தமிழக/தென்னிந்திய வரலாற்றை. முதற்கட்ட வரலாற்றாய்வில் அதற்கான தேவையிருந்தது. நமக்கு நவீன யுகம் தோன்றும் முன் முறையான வரலாற்று பதிவுகள் என எதுவும் கிடையாது. ஜே.ஹெச். நெல்சன், கால்டுவெல் போன்ற ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாற்று ஆவணங்கள் தவிர. எனவே நம் வரலாற்றை ஒட்டுமொத்தமாக ஆவணப்படுத்த நாம் எழுதும் தேவையிருந்தது. 

அடித்தெழுதப்பட்ட வரலாற்றில் ஆடித்திருவாதிரை - இரா. கோமகன்

கங்கைகொண்ட சோழபுரத்து நிசும்பசூதனி

1

வரலாற்றில் விருப்பம் கொண்டவர்கள், குறிப்பாக சோழ வரலாற்றில் முனைப்பு காட்டுபவர்கள் திரு. குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் ஆக்கங்களைத் தவிர்த்து கடந்து செல்ல இயலாது. அவ்வகையில் அவரது படைப்புகள் சோழ வரலாற்றைச் சுற்றி அமைந்துள்ளது. தமிழகத் தொல்லியல்துறையில் திரு. நாகசாமி அவர்கள் இயக்குநராக பணியைத் தொடங்கிய முதல் பத்தாண்டுகளில் குறிப்பிடக்கூடிய வகையில் வரலாறு, தொல்லியல் தொடர்பானப் பணிகள் தீவிரம் கொண்டன. பணிநிறைவடையும் காலத்தின் பின் பத்தாண்டுகளில் பல வரலாற்று அறிஞர்கள் தமிழக வரலாறு தொல்லியல் தளத்தில் இயங்கினர். குடவாயில் திரு. நாகசாமி அவர்களைத் தன் குருவாக வரித்துக்கொண்டவர்.

மீட்சிக்கான ஆசிரியன் - கடலூர் சீனு

குடவாயில் பாலசுப்ரமணியன்

என் அப்பா ஊர் திருநெல்வேலி. நெல்லையப்பர் கோயில் எதிரேதான் எங்கள் வீடு. எங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்த சிறுவர்கள் எல்லோருக்கும் நான் உட்பட, அவர்களின் பால்யம் நெல்லையப்பர் கோயிலோடு கலந்த ஒன்றாகவே இருக்கும். என் அம்மாவின் ஊர் திருச்சி. நடை தூரத்தில் மலைக்கோட்டை கோயில். சில கிலோமீட்டரில் திருவரங்கப் பேராலயம். கடலூரில் சிறு வயது வாழ்வில் எங்கள் வீடு பாடலீஸ்வரர் கோயில் மிக அருகே இருந்தது. என் வாழ்நாளெல்லாம் அதன் நினைவுகளில் பல கோயில் நிகழ்வுகளுடன் கலந்தே கிடக்கிறது.

ஆலயம் தொழுவது - இதயத்துல்லா

காம தகன மூர்த்தி- கங்கை கொண்ட சோழபுரம்

நான் பிறந்து வளர்ந்தது ஒரு இசுலாமியக் குடும்பம் என்பதால், எனக்கும் கோயிலுக்குமான தொடர்பு என்பது மற்றவர்களைவிட குறைவு என்றுதான் சொல்லவேண்டும். மேலும் எங்கள் ஊர் கிராமம் என்பதாலும், தொழில் ரீதியில் விவசாயத்தை பின்புலமாக கொண்ட குடும்பம் என்பதாலும், ஒரே மதத்தினராய் அடர்த்தியாக வசிக்கும் மற்ற இசுலாமியக் குடும்பங்களைப் போல, எங்கள் ஊரில் வசித்த இசுலாமியக் குடும்பங்களில் மதக்கெடுபிடிகள் ஏதும் பெரிதாய் இல்லாமல், மிகவும் இயல்பாகவும் சுதந்திரமாக வளர்ந்தோம் என்றுதான் சொல்லவேண்டும். அதனால் சிறுவயதில் நண்பர்களுடன் கோயிலுக்கு செல்ல தடை ஏதும் இருந்ததில்லை. எங்கள் ஊரில் எல்லா சமூகத்தைச் சார்ந்த மக்களும் வசித்ததால், ஒவ்வொரு சமூகத்தினருக்கும் உரிய கோயில்களில் திருவிழாக்கள் நிகழும், அந்த திருவிழா காலங்களில் நண்பர்களுடன் கலந்துகொண்டு ஒவ்வொரு நாளும் கோயில் மதில்சுவரில் ஏறி விளையாடி மகிழ்வோம். குறிப்பாக தை மாதத்தில் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த தினமான கரிநாள் அன்று நிகழும் கரிநாள் தெப்ப திருவிழா என்பது எங்கள் பகுதியில் நிகழும் மிகப்பெரிய திருவிழா. கிட்டதட்ட கடலூர், பண்ருட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த மக்கள் அனைவரும் குடும்பத்துடன் திரளாக கலந்துகொள்ளும் திருவிழா அது. அதுபோல் ஆடிமாதம் என்றால் மாரியம்மன் கோயிலில் நிகழும் செடல் திருவிழா மற்றும் சூரசம்ஹாரம் என இன்னபிற திருவிழாக் காலங்களிலும் பள்ளிச் சிறுவர்களாய் இருந்த காலத்தில் நண்பர்களுடன் கூடி விளையாடியதுண்டு. ஒவ்வொரு கோயில் திருவிழா காலங்களிலும் நிகழும் பாட்டுக்கச்சேரி, கரகாட்டம், வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகளை விடிய விடிய பார்த்துவிட்டு வீடுகளில் அப்பா அம்மாவிடம் திட்டுவாங்கியிருக்கிறேன்.

குடவாயிலார் என்னும் முன்னத்தி ஏர் - வே.பார்த்திபன்

குடவாயில் பாலசுப்ரமணியன்

வரலாறும் கற்பனைகளும்

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன், பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து, ஆர்குட் கம்யூனிட்டி வலைத்தளம் மற்றும் அது தொடர்பான குழுக்களில் கற்பனையில் திரிந்த காலம் அது. ஒருநாள் பொன்னியின் செல்வன் வாசகர்கள் தஞ்சையில் குழுமினோம். அப்போது அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக முதுமுனைவர். திரு.குடவாயில்.பாலசுப்ரமணியன் கலந்து கொள்கிறார் என அப்போது தெரிவித்தார்கள், அதற்கு முன் அவரை கேள்விப்பட்டதில்லை, யாரோ ஒருவர் தலைமையேற்கிறார், நாமும் செல்வோம் என்ற அளவிலேயே எனது புரிதல் இருந்தது. கோவிலின் தென்புறவாயிலின் சுற்றுச்சுவர் அருகில் குடவாயில் பேச ஆரம்பித்தார். பேச ஆரம்பித்தார் என்பதனை தாண்டி, பொன்னியின் செல்வனில் வரும் நந்தினி முதல் பினாகபாணி வரையிலும் அவர் உடைத்து எறிந்த கற்பனை பாத்திரங்கள் ஏராளம். அவர் பேசப்பேச எது கற்பனை எது வரலாறு என்ற சித்திரம் எங்களுக்குள் இயல்பாக எழுந்து வந்தது. அவரைத்தவிர வேறு யார் அன்று இதை விளக்கியிருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே. பின்னர் கல்வெட்டுகளிலிருந்து “வல்லவரையன் வந்தியத்தேவன்”, “ஆழ்வார் பராந்தகன் குந்தவை”, “லோகமாதேவி”, “கிருஷ்ணன் ராமன்”, “சிவபாதசேகரன்”, “வாழைப்பழ பிள்ளையார்”, தஞ்சைக்கோவில் கல்லெழுத்து எழுதிய, ‘'ரவிபாளூர்” என அவர் வாசித்து காட்ட, அப்படியொரு பிரமிப்பு.

என்னை இழந்த நலம் - முத்துமாணிக்கம்

சண்முகர்

அன்றைக்கு சிவன் கோவிலில் சண்முகர் சன்னதி முன் நின்று கொண்டிருந்தேன். மனம், 

உல்லாச, நிராகுல, யோக இதச்
சல்லாப, விநோதனும் நீ அலையோ? 

என்ற கந்தர் அனுபூதி பாடலை முனுமுனுத்தது. இப்படி சொல்லிக் கொண்டு இருக்கும் போதே என் அருகில் ஒரு குழந்தை 5 அல்லது 6 வயது இருக்கும், "அம்மா, அம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு இருந்தாள். மனதில் ஓடின அனுபூதி பாடல் நின்று விட்டது. அக்குழந்தையின் அம்மா சட்டை செய்யாமல் இருந்தாள். இந்தப் பிள்ளையோ முந்தானையைப் பிடித்து இழுத்து அம்மா அம்மா என்று விடாமல் கூப்பிட்டது. என்ன, ஏன் நச்சறிக்கிற. சொல்லு என்று ஆறு ரசங்களில் ஒரு ரசத்தை அப்பிள்ளை மீது கொட்டினாள். 

நண்பர் குடவாயில் - இரா. சுப்பராயலு

(ஓவியம்-விஷ்ணு ராம்)

தாம் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்த அறிஞர் பெருமக்கள் பலர். திருவாரூர் வி.கலியாண சுந்தரனார், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், சேலம் இராமசாமி முதலியார், சுன்னாகம் குமாரசாமி புலவர், சூளை சோமசுந்தர நாயகர், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், தொழுவூர் வேலாயுத முதலியார், திருமானூர் கிருஷ்ணையர் போன்ற பல தமிழறிஞர்கள் தங்கள் பெயரோடு பிறந்த ஊரை அல்லது வாழ்ந்த ஊரை இணைத்துக்கொண்டு ஊருக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இசையுலகில் பெரிய இசைவாணர்கள் தங்கள் ஊர்ப் பெயரோடுதான் புகழ் பெற்று விளங்கினர். அந்த வரிசையில் குடவாயில் என்ற ஊரை உலகறியச் செய்தவர் பாலசுப்ரமணியன். அவரைக் ‘குடவாயில்’ என்றே அறிஞர் உலகம் அழைக்கிறது. 

ஆசிரியர்கள் பார்வையில் குடவாயில் பாலசுப்ரமணியன்

குடவாயில் பாலு - இரா. நாகசாமி

சோழப் பேரரசர்கள் தஞ்சாவூரைக் கைப்பற்றி அதை ஒரு பெருந்தலைநகராக்கி, சோழ சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கும் முன்னர், இப்பகுதியில் பெரும் தலைநகராகத் திகழ்ந்தது "நந்திபுரம்" என்னும் நகர். சோழப் பேரரசு நிறுவிய பிறகு கூட இரண்டு மூன்று நூற்றாண்டுகள் மிகச் சிறந்த நகராகத் திகழ்ந்தது இவ்வூர். பின்னர் அது இருந்த இடமே தெரியாமல் மறைந்து போயிற்று. ஆதலின் ஆராய்ச்சியாளர்கள் தலைநகராகத் திகழ்ந்த நந்திபுரம் எது?, எங்கிருக்கிறது? என்று ஆய்வு செய்து பழையாறைக்கு அருகில் இப்பொழுது 'நாதன் கோயில்' என்று அழைக்கப்பெறும் ஊர்தான் நந்திபுரம் என்று முடிவுக்கு வந்தனர். அதையே எல்லோரும் இதுகாறும் ஏற்று வந்துள்ளனர். 

இன்னறு நீர் கங்கை - கங்கை நதியும் கங்கா தேவியும், கடலூர் சீனு

கங்கா தேவி

இன்னறு நீர்கங்கை யாறேங்கள் யாறே;

இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே.

 -சுப்பிரமணிய பாரதி


1) கங்கை: தொன்மம் முதல் நவீன காலம் வரை


பாரம்பரிய இந்திய மனங்களுக்கு, இமையமலைத்தொடர் என்பது கைலாயம். சிவன் வாழும் இடம். இமையத்தின் ஒவ்வொரு சிகரமும் சிவலிங்கமே. இமையம் என்பது அந்த சிவனேதான். சிவனின் பெயர்களில் ஒன்று, கங்கைவார் சடையன். தனது ஜாடாமுடிக்குள் வைத்து கங்கையைக் கட்டியவன். விண்ணுலகில் இருந்து கங்கை மண்ணுலகு வீழும்போது அதன் வேகத்தில் பூமி சிதறிவிடாதிருக்க, சிவன் அந்த ஆகாய கங்கையை தனது ஜாடாமுடிக்குள் சிறைப்படுத்தி, மண்ணுலகுக்கு எந்த அளவு தேவையோ அந்த அளவு மட்டும் கங்கையை கசிய விட்டார் என்பது தொன்மக் கதை.

திசையெலாம் முழங்கும் முழவு - குடமுழா, பார்கவி


முந்தி அமரர் முழவின் ஓசை முறைமை வழுவாமே 
அந்தி நிருத்தம் அனல்கை ஏந்தி அழகன் ஆடுமே

-காரைக்கால் அம்மையார் 


தடவரைகள் ஏழுமாய்க் காற்றாய்த் தீயாய்த்
        தண்விசும்பாய்த் தண்விசும்பின் உச்சியாகிக்
கடல்வலயஞ் சூழ்ந்ததொரு ஞாலமாகிக்
காண்கின்ற கதிரவனும் மதியுமாகிக்
குடமுழவச் சதிவழியே அனல் கையேந்திக்
கூத்தாட வல்ல குழகனாகிப்
படவரவொன்றது வாட்டிப் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே

-அப்பர் 

மனித குல வரலாற்றை திரும்பிப் பார்த்தால் அனைத்து நாகரிகங்களுமே தாளத்தை உணர்ந்திருப்பதை கண்டுகொள்ளலாம். மண்ணைக் கொண்டு பாண்டம் செய்யும் பொழுதே அதிலிருந்து பிறக்கும் ஓசையை கூர்கின்றனர். துந்துபி என்ற தாளக்கருவியை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. தோலால் கட்டப்பட்டு இயக்கப் படும் அவனத்த வாத்தியங்களைப் பற்றிய குறிப்பை பரதரின் நாட்டிய சாத்திரத்தில் இருந்து காண்கிறோம். தமிழ் நிலங்களில் மட்டுமே முப்பது வகையான தோற்கருவிகள் வழங்கி வந்தன என்பதை அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரையிலிருந்து அறியலாம். 

தில்லைக்கும் மூத்தபதி - திருவாரூர் திருக்கோவில், ராஜ் பன்னீர் செல்வம்

தியாகராஜர்- (ஓவியம் சில்பி)

"திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லோர்க்கும் அடியேன்" என்ற தம்பிரான் தோழர் சுந்தரர் சொல்லால் உந்தப்பட்டு, ஆரூர் அமர்ந்த அரசனை, தியாகராஜனை நேரில் காண காதல் கொண்டிருந்தேன். அப்படியான சூழலில் திருவாரூர் கோவில் பற்றி அறிந்த கொள்ளத் தேடியபொழுது கிடைத்ததே இந்த "திருவாரூர்த் திருக்கோவில்" என்னும் ஆவணம். வரலாற்றுத் தளத்தில் பயணிக்கும் எவரும், இந்த நூலாசிரியரான திரு குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களை அறியாதவர் இல்லை என்றே சொல்லலாம். ஆய்வு நோக்கில் திரு குடவாயில் பாலசுப்பிரமணியனின் இந்தப் படைப்பு ஆரூர்க் கோவிலின் விலைமதிப்பில்லா ஆவணம். இந்த நூல் மூலம் ஆசிரியர் வழியிலே பயணித்து ஆரூர்த் தியாகராஜரை அறிந்து கொள்வோம். 

வரலாற்றுத்தன்மை எழுத்து - தேவார மாண்பும் ஓதுவார் மரபும், பவித்ரா

திருஞானசம்பந்தர் (ஓவியம் - விஷ்ணு ராம்)

கோவையில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நடந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் வரலாற்றாய்வில் அவர் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். அவ்வுரையில் வரலாற்றிக்கும் (History) வரலாற்றுதன்மைக்குமான (Historicity) வேறுபாடுகளை கூறி இரண்டாம் வகைமையில் பொருந்துபவர் குடவாயில் பாலசுப்பிரமணியம் என்றார். 

பெருஞ்சுடர் வாயில் - தமிழகக் கோபுரக்கலை மரபு, லால்குடி தினேஷ்

நிலவுடன் எந்நேரமும் விளையாட வேண்டும் என்ற ஆசையுடன் ஒர் கந்தர்வன் கடவுளை நோக்கி தவமிருந்தான். அவன் தவத்திற்கு இறங்கிய கடவுள் அவனை மலை உச்சியில் உள்ள சுனையில் மீனாய் படைத்தார். அச்சுனையில் விழும் நிலவின் பிம்பத்துடன் அவன் காலம் முழுவதும் நீந்திக் களித்தான். அது போலத்தான் குடவாயிலின் புத்தங்கள் எனக்கு.

முன்னையிட்டது - பனை உறை தெய்வம், மனோஜ் குமார்

William Daniell, 1810

குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் கட்டுரைகள் குறித்த சிறு நூல் பனை உறை தெய்வம். இந்த தொகுப்பு கோயில் கட்டிடக்கலை, சிற்பவியல், பக்தி இலக்கியங்கள் சார்ந்த 25 கட்டுரைகள் அடங்கியது.

குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களின் ஆய்வு அணுகுமுறை மூன்று சரடுகளால் ஆனது. சிற்பவியல் பின்புலம் கொண்ட ஆய்வறிஞராக ஒவ்வொரு ஆய்வு முடிவிலும் சிற்பங்களில் அமைப்பை முக்கிய சான்றாக கொள்கிறார். சிற்பவியலுடன் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள், பக்தி இலக்கிய சான்றுகள் என்று மூன்று சரடையும் இணைத்து தனது ஆய்வுகளை முன் மொழிகிறார்.

கல் சொல்லும் கதை - கலையியல் ரசனைக் கட்டுரைகள், மகேந்திரன்

கொற்றவை- ஓவியம் சில்பி

ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய கலையியல் ரசனைக் கட்டுரைகள் என்ற புத்தகத்தில் மொத்தம் 30 கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை கீழ்வருமாறு நாம் வகைப்படுத்தி கொள்ளலாம்.

  1. சிற்பங்களை கவிதைகள், புராணங்கள் வழியாக விளக்கும் கட்டுரைகள்

  2. தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்கள் (உ.தா: தலைக்கோலி, இட்டிகை)

1.சிற்பங்களை கவிதைகள், புராணங்கள் வழியாக விளக்கும் கட்டுரைகள்:

தமிழகத்தில் பொதுவாக சிற்பங்களைப் பார்பவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அதனை பொம்மை என்ற அளவில் கடந்து போதல். (ஆபாசம், வீண்வேலை எல்லாம் இதில் சேரும்). இரண்டாவது வகையினர் முழுக்க பக்தி சார்ந்தவர்கள். இவை இரண்டிலும் சேராது அது என்ன என்று தெரிந்து கொள்ள விரும்பும் ஒரு சிறு பிரிவினரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் சிற்பங்களைப் பார்த்து புரிந்துகொள்ள இந்த புத்தகம் பெரிய உதவியாக இருக்கிறது.

Through His Eyes: Exploring Tamil Nadu’s Temple Art with Kudavayil Balasubramaniyan

Kudavayil Balasubramanian

Kudavayil Balasubramanian is a distinguished historian from Tamil Nadu with more than 50 years of sustained research experience. He places temples at the center of his work and reconstructs history through their cultural elements. While contemporary studies often prioritize political administration and social structures, artistic and cultural traditions—many now endangered—receive limited scholarly attention. It is precisely in this context that Kudavayil Balasubramanian’s work assumes particular significance.

കുടവായിൽ ബാലസുബ്രമണിയൻ : ചരിത്ര ഗവേഷണത്തിൻ്റെ സൗന്ദര്യാത്മക വഴി:താമരൈക്കണ്ണന്

കുടവായിൽ ബാലസുബ്രമണിയൻ

തമിഴകത്തിലെ ചരിത്ര ഗവേഷകനാണ് കുടവായിൽ ബാലസുബ്രഹ്മണ്യൻ, തമിഴിൻ്റെ സാംസ്ക്കാരിക മുഖങ്ങളിൽ ഒരാൾ. അരനൂറ്റാണ്ടിലേറെയായി ഗവേഷണത്തിൽ ഏർപ്പെട്ടു വരുന്നു. ക്ഷേത്രങ്ങൾ കേന്ദ്രമാക്കി, അവയുടെ സാംസ്കാരിക സവിശേഷതകൾ അടിസ്ഥാനമാക്കി, ചരിത്രരചന നിർവഹിക്കുന്നതാണ് കുടവായിൽ ബാലസുബ്രഹ്മണ്യൻ്റെ വഴി. രാഷ്ട്രീയ - സാമൂഹ്യ പഠനത്തിനാണ് ഇന്നത്തെ ഗവേഷകർ പൊതുവേ പ്രാധാന്യം നൽകിവരുന്നത്. മറുവശത്ത് കലാപാരമ്പര്യം നാശോന്മുഖമായിരുന്നാൽ പോലും അതർഹിക്കുന്ന ശ്രദ്ധ ഗവേഷണരംഗത്ത് ലഭിക്കുന്നില്ല. ഈ പശ്ചാത്തലത്തിലാണ് കുടവായിൽ ബാലസുബ്രഹ്മണ്യൻ്റെ പഠനങ്ങൾ പ്രസക്തമാകുന്നത്.

ಕುಡವಾಯಿಲ್ ಬಾಲಸುಬ್ರಮಣಿಯನ್ - ತಮಿಳುನಾಡಿನ ದೇವಾಲಯಗಳ ಕಲಾ ಪರಂಪರೆ : ಒಂದು ನೋಟ- ತಾಮರೈಕ್ಕಣ್ಣನ್

ಕುಡವಾಯಿಲ್ ಬಾಲಸುಬ್ರಮಣಿಯನ್

ಕುಡವಾಯಿಲ್ ಬಾಲಸುಬ್ರಮಣಿಯನ್ ರವರು ತಮಿಳುನಾಡಿನ ಸುಪ್ರಸಿದ್ಧ ಇತಿಹಾಸಕಾರರು.ಇವರು 50 ವರ್ಷಗಳಿಗೂ ಹೆಚ್ಚಿನ ಸುದೀರ್ಘ ಸಂಶೋಧನಾ ಅನುಭವವನ್ನು ಹೊಂದಿದ್ದಾರೆ. ಸಮಕಾಲೀನ ಇತಿಹಾಸದ ಅಧ್ಯಯನಗಳು ಹೆಚ್ಚಾಗಿ ರಾಜಕೀಯ ಆಡಳಿತ ಮತ್ತು ಸಾಮಾಜಿಕ ರಚನೆಗಳಿಗೆ ಆದ್ಯತೆ ನೀಡಿದರೆ ಇವರ ಸಂಶೋಧನೆಯ ಮೂಲಧಾತುವಾಗಿ ದೇಗುಲ ಶಿಲ್ಪದ ಸಾಂಸ್ಕೃತಿಕ ಅಂಶಗಳಿಂದ ಇತಿಹಾಸವನ್ನು ಪುನರ್ನಿರ್ಮಿಸುತ್ತಿದ್ದಾರೆ. ಈಗ ಅಳಿವಿನಂಚಿನಲ್ಲಿರುವ ಕಲಾತ್ಮಕ ಅಂಶಗಳು ಮತ್ತು ಸಾಂಸ್ಕೃತಿಕ ಸಂಪ್ರದಾಯಗಳು ಸೀಮಿತ ವಿದ್ವತ್ಪೂರ್ಣ ಗಮನವನ್ನು ಪಡೆಯುತ್ತಿದ್ದರೂ ಇವು ಬಾಲಸುಬ್ರಮಣಿಯನ್ ಅವರ ಕೃತಿಗಳ ವೈಶಿಷ್ಟ್ಯವಾಗಿವೆ.

కుడవాయిల్ బాలసుబ్రమణియన్ ‍- ‍తమిళనాడు ఆలయకళ ముఖద్వారం: అవని


మ‌న చ‌రిత్ర‌కి కొత్త వెలుగులు...


తంజావూరు... మ‌న‌కు ప‌రిచ‌యం ఉన్న పేరు. బృహ‌దీశ్వ‌రాల‌యం అక్క‌డే ఉంద‌నీ మ‌నం విని ఉంటాం. చ‌రిత్ర‌లో కాసింత ఆస‌క్తి ఉన్న‌వాళ్ల‌కి ఆ ప్రాంతాన్ని మ‌న తెలుగు నాయ‌క‌రాజులూ ప‌రిపాలించి ఉన్నార‌న్న విష‌య‌మూ తెలిసే ఉంటుంది. కొద్దిగా సాహిత్యంపైన అభిమానం ఉన్న‌వాళ్ల‌యితే వాళ్ల‌లోని ర‌ఘునాథ నాయ‌కుడి ప్ర‌శ‌స్తి ఎరిగే ఉంటారు. అటు క‌లాన్నీ ఇటు క‌ర‌వాలాన్నీ స‌మ‌ర్థంగా ఝ‌ళిపించిన‌వాడాయ‌న‌. *విజ‌య‌విలాస* క‌వి చేమకూర వెంక‌ట‌రాజు ఆయ‌న ఆస్థానం వాడే. ఆ ప్ర‌బంధానికి కృతిభ‌ర్త కూడా ర‌ఘునాథ నాయ‌కుడే. ఇదే వంశానికి చెందిన అచ్యుత‌ప్ప నాయ‌కుడు, చెవ్వ‌ప్ప నాయ‌కుడు తెలుగు సాహిత్యానికి పెద్ద ఎత్తున నీరాజ‌నాలు ప‌ట్టిన‌వారే. సాహిత్య‌మే కాదు నేడు త‌మిళనాట అనంత సూర్య‌ర‌శ్మిలా తేజ‌రిల్లుతున్న క‌ర్ణాట‌క సంగీతానికీ ఎంతో సేవ చేసిన‌వాళ్లు ఈ తెలుగు రాజులు. తెలుగు ప్రాచీన సాహిత్యానికి వేంగి చాళుక్యులు, విజ‌య‌న‌గ‌ర రాజ వంశీయులు చేసిన సేవ‌కి ఏమాత్రం తీసిపోనిది తంజావూరు నాయ‌కుల సేవ‌. కాక‌పోతే, ఆ నాయ‌కుల చ‌రిత్ర‌ని నేల‌టూరి వెంక‌ట‌ర‌మ‌ణ‌, వేటూరి ప్ర‌భాక‌ర శాస్త్రిల త‌ర్వాత పెద్ద‌గా ప‌ట్టించుకున్న తెలుగు చ‌రిత్ర‌కారులు ఎవ‌రూ లేరు. భాషా ప్ర‌యుక్త రాష్ట్రం పేరుతో నాటి మ‌ద్రాసు నుంచి ఆంధ్ర‌ప్రాంతాలు విడిపోయి... త‌మ చుట్టూ గిరిగీసుకుని... తెలుగు చ‌రిత్ర‌ని ఆ కొద్ది ప‌రిధికే ప‌రిమితం చేసుకోవ‌డం ఇందుకో కార‌ణం. అప్పుడ‌ప్పుడూ ఆరుద్ర‌లాంటివాళ్లు ‘తంజావూరు స‌ర‌స్వ‌తి మ‌హ‌లు లైబ్ర‌రీలో మ‌నం ఇప్ప‌టిదాకా చూడ‌ని తెలుగు చ‌రిత్ర ఉంద‌హో ‘ అంటున్నా ‘కామోసు’ అనుకున్నారు త‌ప్ప దాన్ని పూర్తిగా త‌ర‌చి చూసిన‌వాళ్లు లేరు. అలా మ‌న తెలుగు చ‌రిత్ర‌కారులు విస్మ‌రించిన ప‌నిని... అద్భుతంగా నిర్వ‌ర్తించిన చ‌రిత్ర‌కారుడు కుడ‌వాయిల్ బాల‌సుబ్ర‌హ్మ‌ణ్య‌న్‌! నేల‌టూరి వెంక‌ట‌ర‌మ‌ణయ్య‌, వేటూరి ప్ర‌భాక‌ర‌శాస్ర్తిలాంటివాళ్లు అప్ప‌ట్లో త‌మ‌కున్న ప‌రిమిత చ‌రిత్ర ఆధారాల ద్వారా సాగించిన ప‌నిని... వాళ్ల ప‌రిశోధ‌న‌లోని లోటుపాట్ల‌ని... స‌రికొత్త ఆధారాల‌తో పూరించిన‌వాడు బాలసుబ్ర‌మ‌ణ్య‌న్‌! పేరుకి త‌మిళ చ‌రిత్ర‌కారుడైనా ఆయ‌న కృషిలో స‌గానికి పైగా తెలుగు రాజులకి సంబంధించిందేన‌ని చెప్పాలి.

Ganges from South - Cuddalore Seenu

(credits-Arghya Dipta Kar)
இன்னறு நீர்கங்கை யாறேங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே.

Who among mortals rivals Ganga’s holy flow?
Before her noble grace, what else could ever glow?

   -Subramaniya Bharathi

Prologue

At Rishikesh, on the edge of the Himalayas, I once watched the evening arati offered to the Ganga as she flowed past an ashram gate. Seated on the riverside steps, I listened as the head of the ashram spoke briefly on yoga, likening the iḍa naḍi to the Ganga, the pingala to the Yamuna, and the subtle channel to the Sarasvati.

തമിഴ്നാട്ടിലെ മിഴാവ്:അഴകിയ മണവാളന്‍

ചരിത്ര ഗവേഷകന്‍ കുഡവായില്‍ പാലസുബ്രമണിയന്‍റെ 'കുടമുഴാ' എന്ന ഗവേഷണ ഗ്രന്ഥത്തെക്കുറിച്ച് ഒരു ചെറിയ ആമുഖം

കുടമുഴാ എന്ന സംഗീതോപകരണത്തെക്കുറിച്ച് തമിഴിൽ ഒരു ഗവേഷണഗ്രന്ഥം എഴുതപ്പെട്ടിട്ടുണ്ട്. കുടമുഴയെ പഞ്ചമുഖ വാദ്യം എന്നും വിളിക്കുന്നു. ഈ ഗ്രന്ഥത്തിന്റെ രചയിതാവ് ഗവേഷകനായ കുടവായിൽ ബാലസുബ്രഹ്മണ്യൻ ആണ്. ബാലസുബ്രഹ്മണ്യൻ ദീർഘകാലമായി ചരിത്രഗവേഷണങ്ങളിൽ ഏർപ്പെട്ടുവരുന്ന വ്യക്തിയാണ്. പ്രത്യേകിച്ച് ചോഴരുടെ മഹാക്ഷേത്രങ്ങളെക്കുറിച്ചും ശൈവ ഭക്തിസാഹിത്യമായ തേവാരം സംബന്ധിച്ചും അദ്ദേഹം രചിച്ച ഗ്രന്ഥങ്ങൾ വളരെ പ്രാധാന്യമുള്ളവയാണ്. ശുദ്ധമായ ഗവേഷണോപകരണങ്ങളെ മാത്രം മുൻനിർത്താതെ, പുരാവസ്തു അവശിഷ്ടങ്ങളെ മാത്രം ചരിത്രപരമായ തെളിവുകളായ് കണക്കാക്കുന്ന, ഒരുതരം ശാഠ്യമായ ചരിത്ര ഗവേഷണ രീതിയില്‍ നിന്ന് മാറി അപൂർവഗ്രന്ഥങ്ങളെക്കൂടി പഠനവിഷയമാക്കുന്നതും, പരമ്പരാഗതമായ കാഴ്ചപ്പാടുകളെ വിലയിരുത്തന്ന നോക്കില്‍ സമീപിക്കുന്നതും അദ്ദേഹത്തിന്‍റെ ഗവേഷണശൈലി എന്ന് പറയാം.

తమిళనాడును పాలించిన తెలుగు రాజులు - విశ్లేషకుడు 'కుడవయిల్ బాలసుబ్రహ్మణ్యం':ఝాన్సీ

మన్నార్గుడి రాజగోపాల స్వామి - విజయరాఘవ నాయక్ అలంకారం

కుడవాయిల్ బాలసుబ్ర‌మ‌ణియ‌న్... యాభై ఏళ్లుగా ప‌రిశోధ‌న‌లు చేస్తున్న విశిష్ట చ‌రిత్ర‌కారుడు. ఆయ‌న తంజావూరుని ప‌రిపాలించిన తెలుగు రాజుల గురించి రాసిన రెండు త‌మిళ గ్రంథాల గురించి మ‌నం తెలుసుకోవాల్సిన అవ‌స‌రం ఎంతైనా ఉంది.

తెలుగువారిగా మ‌నం గ‌ర్వించ‌ద‌గ్గ అంశాలు ఎన్నో ఉన్నాయి వీటిల్లో. తంజావూర్ నాయకర్ వరలారు (తంజావూరు నాయకరాజుల చరిత్ర), తమిళ్ మ‌న్న‌న్ కోనేరిరాయన్ (తమిళరాజు కోనేరిరాయన్) అనే ఆ రెండు పుస్త‌కాల చిరు ప‌రిచ‌యం ఇది...